Saturday, November 18, 2006

பிறவிக் கடன்

என்னைத் தூக்கி வளர்த்த கடனை
----உன்னைச்சுடுகாடு வரை தூக்கி கழித்தேன்
எனக்குப் பாலூட்டிய கடனை
----உனக்கு வாய்க்கரிசியிட்டுக் கழித்தேன்
எனக்குத் திருட்டி பொட்டிட்ட கடனை
----உன் படத்திற்கு மாலையிட்டு கழித்தேன்
என்னை பிறசவிக்கும் போது பட்ட கடனை
----எதை செய்து கழிப்பேன்

Sunday, October 15, 2006

நேரு கண்ணதாசன்

ஆசியாவின் ஜோதி மறைந்த போது கவியரசு உதிர்த்த கவிதை



சீரிய நெற்றி எங்கே

சிவந்தநல் இதழ்கள் எங்கே

கூரிய விழிகள் எங்கே

குறுநகை போன தெங்கே

நேரிய பார்வை எங்கே

நிமிர்ந்தநன் நடைதா னெங்கே?

நிலமெலாம் வணங்கும் தோற்றம்

நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்

அண்ணலைத் தீயிலிட்டார்

அன்னையைத் தீயிலிட்டார்

பிள்ளையைத் தீயிலிட்டார்

தீயவை நினையா நெஞ்சைத்

தீயிலே எரியவிட்டார்

தீயசொல் சொல்லா வாயைத்

தீயிலே கருகவிட்டார்!

வேறு


பச்சைக் குழந்தை

பாலுக்குத் தவித்திருக்க

பெற்றவளை அந்தப்

பெருமான்அழைத்துவிட்டான்

வானத்தில் வல்லூறு

வட்டமிடும் வேளையிலே

சேங்க்கிளியைக் கலங்கவிட்டுத்

தாய்க்கிளிளைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்

சாவுவந்து சேராதோ!

சஞ்சலமே நீயுமொரு

சஞ்சலத்தைக் காணாயே!

தீயே உனக்கொருநாள்

தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும்நாம்

தேம்பி அழ வையோமோ!

யாரிடத்துப் போயுரைப்போம்!

யார்மொழியல் அதைதிகொள்வோம்?

யார்துணையில் வாழ்ந்திருப்போம்?

யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த

வேதனே எம்மையும் நீ

ஊரோடு கொண்டுசென்றால்

உயிர்வாதை எம்கில்லையே...

நீரோடும் கண்களுக்கு

நம்மதியை பார்தருவார்?

நேருஇல்லா பாரதத்தை

நினைவில்யார் வைத்திருப்பார்?

ஐயையோ! காலமே!

ஆண்டவனே! எங்கள்துயர்

ஆறாதே ஆறாதே

அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்

கண்மூட வைத்தாயே

கண்கொடுத்த காவலனைக்

கண்மூட வைத்தாயே

கண்டதெல்லாம் உண்மையா

கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா

கற்பனையா அம்மம்மா...

நேருவா மறைந்தார்; இல்லை!

நேர்மைக்குச் சாவே இல்லை!

அழிவில்லை முடிவுமில்லை

அன்புக்கு மரணம் இல்லை!

இருக்கின்றார் நேரு

இங்கேதான் இங்கேதான்

எம்முயிரில், இரத்தத்தில்,

இதயத்தில், நரம்புகளில்,

கண்ணில், செவியில்,

கைத்தலத்தில் இருக்கின்றார்

எங்கள் தலைவர்

எமைவிட்டுச் செல்வதில்லை!

என்றும் அவர் பெயரை

எம்முடனெ வைத்திருப்போம்

அம்மா...அம்மா....அம்மா.....!














Wednesday, October 04, 2006

காமராஜர் பேச்சு

காமராஜர் சொல்கிறார்,"யார்மேலும் வெறுப்புணர்ச்சி உண்டாக்கக் கூடாது அரசியலில் நேர்மை வேண்டும், ஓழுக்கம் வேண்டும், கட்டுப்பாடு வேண்டும்...

காமராஜர் பேச்சு

Monday, October 02, 2006

சிவாஜி மக்கள் அரசியலுக்கு வர விருப்பம்

சிவாஜி மகன் ராம்குமார்

என் தந்தை சிவாஜி கலை உலகில் நிறைய சாதிச்சார். வீரபாண்டிய கட்ட பொம் மனை சிவாஜி வடிவில் பார்ப்பதாக பலர் பெருமைபட்டார்கள். அரசியலுக்கு வந்தும் மக்களுக்கு சேவை செய்தார்.

நாங்களும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளோம். யாரெல்லாமோ அரசியலுக்கு வருகிறார்கள். நாங்கள் ஏன் வரக்கூடாது. என் தம்பி பிரபுவை அரசியலில் இறக்கி விடுவேன். விரைவில் பிரபு அரசியலுக்கு வருவார். இது உறுதி. அவருக்கு நான் துணையாக இருப்பேன்.


தயவுசெய்து இவர்கள் தனிக்கட்சி ஆராம்பிக்காமல் ஏதேனும் ஒரு கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்யலாம் தந்தை ஆரம்பித்த அந்த கட்சியின் பெயரே எனக்கு மறந்து போச்சு தமிழ் முன்னேற்ற முன்னணி என நினைக்கிறேன். ஆனானபட்ட அவராலே முடியவில்லை வேண்டாம் தனிகட்சி .

மாலைமலர்

Sunday, October 01, 2006

கலைத்தாயின் மூத்தமகன் பிறந்த நாள்

அமெரிக்க அதிபவர் ஜான் கென்னடியால் அழைக்கப்பட்டவர்
2 மாதம் சுற்றுப்பயணம்
அமெரிக்காவில் 2 மாத காலம் சிவாஜி சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு அமெரிக்க அரசாங்கம் 2 கார்களையும், 2 செய லாளர்களையும் கொடுத்தது. ஒரு நாள் செலவுக்கு ("பாக்கெட் மணி") 160 டாலர் கொடுத்தது.அமெரிக்க நடிகர் - நடிகைகளை சந்திப்பதற்கும், ஸ்டூடியோக்களை பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்து இருந்தது. மார்லன் பிராண்டோவுடன் சந்திப்பு உலகின் தலைசிறந்த நடிகர் என்று புகழ் பெற்றிருந்தவர் மார்லன் பிராண்டோ. "ஜுலியஸ் சீசர்", "ஆன் தி வாட்டர் பிரண்ட்", "சயோனரா" முதலிய

படங்களில் நடித்தவர். "ஆன் தி வாட்டர் பிரண்ட்" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, ஆஸ்கார் பரிசு பெற்றவர்.


அறிஞர் அண்ணா ஒரு கூட்டத்தில் பேசும்போது, "சிவாஜிகணேசனைப் போல் இன்னொருவர் நடிப்பது சிரமம். ஒருவேளை மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், சிவாஜிக்கு இணையாக நடிக்கக்கூடும்" என்று குறிப்பிட்டிருந்தார். அத்தகைய மார்லன் பிராண்டோ, சிவாஜிகணேசனை வரவேற்று விருந்து கொடுத்தார். அப்போது, "அக்ளி அமெரிக்கன்" என்ற படத்தில் மார்லன் பிராண்டோ நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜியுடன் நீண்ட நேரம் மார்லன் பிராண்டோ பேசிக் கொண்டிருந்தார்.


"இந்திய சினிமா படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று சிவாஜி கேட்டார்.


"சத்யஜித்ரே எடுத்த படத்தைப் பார்த்தேன். கண்ணீர் வந்துவிட்டது" என்றார், பிராண்டோ.


"இந்திய கிராமங்களில் தெருக்களில் சாக்கடை ஓடுவது... அங்கு குழந்தைகள் விளையாடுவது... வறுமை காரணமாக நடக்கும் விபசாரம்... இத்தகைய காட்சிகள் வெகு இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தன. இதனால் அக்காட்சிகள் என் மனதைத் தொட்டு, கண்ணீர் வரச்செய்தன. சத்யஜித்ரே, அப்படத்தை சிறப்பாக எடுத்திருந்தார்" என்று கூறிய மார்லன் பிராண்டோ, இறுதியில் "அது நல்ல பொழுது போக்குப்படம்" என்று குறிப்பிட்டார்.

அதற்கு சிவாஜிகணேசன், "நீங்கள் பணக்காரர். அதனால் எங்கள் குழந்தைகள் சாக்கடையில்

விளையாடுவது, வறுமை காரணமாக விபசாரம் நடப்பது எல்லாம் உங்களுக்கு பொழுதுபோக்காக தோன்றுகிறது. சத்யஜித்ரே உங்களுக்காக இந்தப் படங்களை எடுக்கவில்லை. எங்களுடைய மக்களுக்காக எடுத்திருக்கிறார். எங்கள் மக்களில் பலர் ஏழைகள். அவர்கள் மாறவேண்டும், வறுமை ஒழியவேண்டும், நாடு முன்னேற வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்துவதற்காக அந்த மாதிரி படங்களை எடுக்கிறார்" என்று கூறினார்.இதுபற்றி சிவாஜிகணேசன் பிறகு கூறும்போது, "நான் ஆங்கிலம் பேச பயப்படமாட்டேன். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளாசிவிட்டேன். மார்லன் பிராண்டோ

கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். என் பேச்சுக்கிடையில் இரண்டு மூன்று முறை காபி

குடித்துவிட்டார்! என்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தில் மார்லன் பிராண்டோவை சந்தித்தது மறக்கமுடியாதது" என்று குறிப்பிட்டார்.உலகப் புகழ் பெற்ற கவர்ச்சிக்கன்னி மர்லின் மன்றோவையும் சிவாஜி சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. காரில் நண்பர் வந்து சேருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சிவாஜி உரிய நேரத்தில் போய்ச்சேர முடியவில்லை.


நயாகரா மேயர்


சிவாஜிகணேசன் நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்றார். அவரை நயாகரா நகர மேயர் வரவேற்றார். அத்துடன் அவருக்கு ஒரு தங்கச்சாவியைக் கொடுத்து, "இன்று ஒரு நாள் நீங்கள்தான் இந்த நகரத்தின் மேயர். அதற்கு அடையாளம்தான் இந்த தங்கச்சாவி" என்றார்.

பிற நாடுகளில் இருந்து வருகிற மிக முக்கிய தலைவர் அல்லது பிரமுகர்களுக்குத்தான் இத்தகைய கவுரவம் நயாகரா நகரில் தரப்படுவது வழக்கம். சிவாஜிக்கு முன்னதாக இத்தகைய கவுரவத்தைப் பெற்ற இந்தியர் பிரதமர் நேரு மட்டுமே.


மலேசியா


அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், மலேசியாவுக்கு சிவாஜி சென்றார். அங்கு அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகிமானும், மலேசியத் தமிழர்களும் வரவேற்பு அளித்தனர். பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள தமிழர்களும் வரவேற்பு அளித்தனர்.சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை

நடிகர்-நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.

Saturday, September 30, 2006

2 விமானங்கள் மோதல்


பிரேசில் நாட்டில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்: 155 பயணிகள் கதி என்ன?

ரியோடி ஜெனிரோ, செப். 30-

பிரேசில் நாட்டின் கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட்விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மனாஸ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 155 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பரா மாநிலத்தில் உள்ள சீரா டி.கேக்சிம்போ பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது.

அப்போது அந்த ஜெட் விமானம் இன்னொரு விமானம் மீது மோதியது. இதில் இன்னொரு விமானம் நிலை தடுமாறியது. அந்த விமானத்தை விமானி அருகில் உள்ள வயல் வெளியில் அவசரமாக தரை இறக்கி விட்டார். இதனால் அந்த விமானம் தப்பியது.
மாலை மலர் செய்தி

155 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அமேசான் காட்டுப்பகுதியில் அந்த விமானம் நொறுங்கிய விழுந்ததாப அல்லது வேறு எங்காவது தரை இறங்கியதாப அதில் இருந்த 155 பயணிகள் கதி என்னப என்பது தெரியவில்லை. விமானத்துக்கும் தரை கட்டுப் பாட்டு நிலையத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப் பட்டு விட்டது. இதை தொடர்ந்து அந்த விமானத்தை தேட விமானப்படை விமானங் கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Thursday, September 28, 2006

மன்னன் பாரி

பாரிவள்ளல் ஆண்டு கொண்டிருந்த பறம்பு நாடு எத்தகைய மக்களைப் பெற்றது, எத்தகைய செல்வத்தைப் பெற்றது? பாரி இறந்த பின் பாரியின் இரு பெண்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்த கபிலர், இப்புறநானூற்றுப் பாடல் வழி, தனது கலக்கத்தை கூறுமிடத்து, பறம்பு நாட்டின் செல்வத்தைப் பற்றிப் பாடுகிறார். (புறம்: 113)

பெரும் புகழை உடையதாம் பறம்பு நாடு. அந்நாட்டு மக்களும் பாரியைப் போலவே கொடைத் தன்மையில் சிறந்திருந்தனராம். விருந்தினர்கள் தங்களுக்கு வேண்டும் அளவு அருந்துவதற்காக, அவர்கள் வீடுகளில் உள்ள மதுச் சாடிகள் திறந்தே இருக்குமாம். வருபவர்கள் பசியாற, ஆட்டுக் கிடாய்களை வெட்டிய வண்ணம் இருப்பராம். கொழுந்துவையலையும், ஊன் கலந்த சோற்றையும் எப்பொழுதும் சமைத்த வண்ணம் இருப்பராம். 'இத்தகைய செல்வம் நிறைந்தது பாரி நாடு. ஆனால் இப்பொழுது அவனில்லாமல் மக்கள் அனைவரும் கலங்கியிருக்கின்றனர். பாரியின் மக்களை உரிய கணவரிடம் சேர்ப்பிக்க அழைத்துச் செல்கிறேன்' என்று தனது கையறு நிலையை விளக்கியிருக்கிறார் கபிலர்.
பிரான்மலை அல்லது பறம்பு மலை


முல்லைக்குத் தேர்கொடுத்த வள்ளல் பாரியை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அம்மன்னர் அரசாண்ட பறம்பு மலையைத் தெரியுமா?


தன் ஆட்சிக்குள் பட்ட முன்னூறு ஊர்களையும் கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பரிசாக வாரி வழங்கிய வள்ளல் பாரியின் தலைமையிடம்தான் பறம்பு மலை.




எங்கே இருக்கிறது பறம்புமலை?


சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டத்துக்குள் பட்ட சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக பொன்னமராவதி செல்லும் சாலையில் உள்ளது.


சங்க காலத்தின் பறம்பு மலை என்றும். சமய காலத்தில் திருக்கொடுங்குன்றம் என்றும் பெயர் பெற்ற இம்மலையும், மலைசார்ந்த ஊரும் தற்போது பிரான்மலை என்று பெயர்பெற்றிருக்கின்றன. தரைமட்டத்திலிருந்து 2450 அடி உயரமுள்ளது இம்மலை. ஈண்டு நின்றோருக்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்


என்று கபிலரால் பாடப்பட்ட இம்மலை எங்கிருந்து பார்த்தாலும் ராஜகோபுரம் போல கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.


மலையடிவாரத்தின் துவக்கத்தில் வசதியான படிக்கட்டுகளும், மேலே போகப்போக பாறைகளில் படி போல செதுக்கப்பட்டும், ஓரங்களில் பாதுகாப்புக் கைப்பிடியும் அமைக்கப்பட்டுள்ளன.


மலையில் கால்பகுதி ஏறியதும் இயல்பான களைப்பு ஏற்படலாம். ஆசுவாசம் தேடும் அவ்வேளையில் இயற்கையின் கூடாரமாக உதவுகிறது முக்காலிக்கல். குளுகுளு காற்று வரும் இக்கல்லின் இடைப்பகுதி ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது.


மூங்கிலரிசி, பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் ஆகியவை இயற்கையாகவே பிரான்மலையில் விளைகின்றன.


இம்மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான மலர்களும் பூத்துகிடப்பதை தனது குறிஞ்சிப்பாட்டில் விவரிக்கிறார், பாரியின் உற்ற தோழரான கபிலர்.


அதே போல, 'பாரி பறம்பின் பைந்தண் சுனைநீர்' என்று சங்க இலக்கியத்தில் சிறப்பித்துக் கூறப்படும் நூற்றுக்கணக்கான குளிர்ந்த சுனைகளும் இங்கு குறிப்படத்தக்க அதிச அம்சம். மஞ்சள் நிறத்தில் மெல்லிய படலம் படர்ந்த மஞ்சள் சுனை, சூரிய ஒளியே புக முடியாத காணாச்சுனை காசிச்சுனை என்று அவற்றுக்குப் பெயர்களும் உண்டு.


அதே போல பறம்பு மலை அடிவாரத்தில் உள்ள தேனாடி தீர்த்தம் துவங்கி மலை உச்சியில் உள்ள இராமர் தீர்த்தம், லக்ஷ்மணர் தீர்த்தம் வரை 108 புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. மலையில் ஏறக்குறைய 10 கிலோமீட்டர் ஏறுவதால் ஏற்பட்ட களைப்பெல்லாம் மலை உச்சியிலுள்ள குளிர்ந்த ராமர் தீர்த்தத்தில் நீராடும்போது பறந்துவிடும்.


பறம்புமலை உச்சிவிளிம்பில் இராமர் தீர்த்தக்கரையை ஒட்டி சையத் அவூலியா ஒலியுல்லா தர்ஹா உள்ளது. வடநாட்டவர் உள்ளிட்ட முஸ்லிம்களும், இந்துக்களும் வழிபடும் ஒற்றுமைத் தலம் இது. இம்மலையின் அடிவாரத்தில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உள்பட்ட குயிலமுத நாயகி உடனாய திருக்கொடுங்குன்ற நாதர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகோ அழகு


சங்க காலத்தில் கபிலர், அவ்வையார், நக்கீரர், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார், மிளைக் கந்தனார் முதலிய புலவர்களும், சமய எழுச்சிக்காலத்தில் திருஞானசம்பந்தர் பதிகம் பாட, அப்பரும் மாணிக்கவாசகரும் தத்தமது பாடல்களில் இத்தலத்தை நினைவு கூறுகின்றனர். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். இங்கு ஆண்டு தோறும் சித்திரை பத்து நாள் திருவிழாவில் வள்ளல் பாரியின் விழா நடைபெறுகிறது.


இம்மலை உச்சியில் வேல்வடிவில் பாலமுருகன் கோயில் கொண்டுள்ளான். பிள்ளையார் கோயிலும் உள்ளது. கார்த்திகை அன்று |திருப்பரங்குன்றத்தைப் போல இம்மலை உச்சியிலும் பெரிய அளவில் தீபம் ஏற்றப்படுகிறது.


இம்மலையின் பின்பகுதிகளில் அடுக்கடுக்கான பகுதியாகக் காணப்படும் இடங்களில் முன்னர் அரண்மனை இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. பலமுறை நடந்த போர்களில் அவை அழிக்கப்பட்டிருக்கவேண்டும். சங்க காலத்தில் மூவேந்தர்களாலும், பின்னர் பாண்டிய சோழப் போர்களாலும் இம்மலைப்பகுதி சூறையாடப்பட்டிருக்கிறது.


இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் மருதுபாண்டியர்களுக்கு உற்ற களமாக இம்மலைப்பகுதி அமைந்திருக்கிறது. இங்கு நடைபெற்ற போர் குறித்து சிவகங்கை விடுதலைக்கும்மி, அம்மானைப்பாடல்கள் பாடுகின்றன. அதற்குச் சான்றாக உள்ளன சிதைந்த பீரங்கிகள்.


[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனின்]] தம்பி ஊமைத்துரை தலைமறைவாகி வசித்த குகையும் பறம்பு மலையில் உள்ளது.


மழைக்காலங்களில் இம்மலை மீது மேக வெண்போர்வை போர்த்தும் காட்சி அற்புதமானது. அதே போல சூரியோதயத்தின்போதும், பௌர்ணமி இரவின்போதும் கவித்துவ அழகாய்த் திகழும் இம்மலை. அதனால்தான் பாரி மகளிர் தம் தந்தையின் பிரிவை நினைத்து, 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்' என்று புறப்பாடல்கள் இசைத்தனர்.


பிறை நாட்களிலும் அதுவுமில்லாத இரவுகளிலும் விண்மீன்கள் மினுக்கும் நள்ளிரவில் இம்மலை குளிரில் உறைந்து கிடக்கும் காட்சி, வள்ளல் பாரியை வஞ்சகமாகக் கொன்ற சோகத்தை நினைவு படுத்துவதாகவே தோன்றுகிறது..


பேராசிரியர் கிருங்கை சேதுபதி தினமணி 5.2.2006

Wednesday, September 27, 2006

மனு யாரும் கொடுக்கவில்லை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கூத்தைப்பாரில் யாரும் உள்ளாட்சி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய வில்லை.

இந்த ஊரில் பல ஆண்டுகளாக கிராம கமிட்டியே கூடி உறுப்பினர்களை தேர்வு செய்வது வழக்கம் அதாவது ஒரு குடும்பத்தில் இம்முறை தேர்வு செய்தால் அடுத்தமுறை அவர்களுக்கு கிடையாது. இம்முறை முணையதிரியருக்கு கொடுத்தால் அடுத்த முறை தொண்டைமாருக்கு பிறகு கார்க்கொண்டார் இவ்வாறாக தேர்ந்தெடுப்பது வழக்கம் . இங்கு திருவெறும்பூர் சட்டமற்ற உறுப்பிணர் சேகரனும் (கார்க்கொண்டார்) இந்த ஊர்காரர்தான்.

இந்தாண்டு மட்டும் இதில் சிக்கல் வந்து விட்டதால் யாரையும் தேர்வு செய்யமுடியாமல் போய்விட்டது . ஆகவே யாரும் மனு செய்யவில்லை.
மேற்படி பேரூராட்சி தனித்தொகுதியாக ஒதுக்கப்பட்டது

தீவிர வாதிக்குத் தூக்கு




04. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கின் குற்றவாளி : முகமது அப்சலுக்கு அக்., 20ல் துõக்கு தண்டனை

புதுடில்லி: கடந்த 2001ம் ஆண்டு பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாதி முகமது அப்சலுக்கு, அடுத்த மாதம் 20ம் தேதி திகார் சிறையில் துõக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

கடந்த 2001 டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்ட் வளாகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை, பாதுகாப்பு வீரர்கள் கடுமையாக போராடி முறியடித்தனர். இது தொடர்பாக, ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாதிகள் முகமது அப்சல், சவுகத் உசேன், சவுகத்தின் மனைவி நவ்ஜோத் சாந்து மற்றும் டில்லி கல்லுõரி பேராசிரியர் கிலானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பொடா, ஆயுதங்கள் சட்டம், வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்களை குற்றவாளி என கீழ்கோர்ட் தீர்ப்பளித்தது. எனினும், கிலானி மற்றும் சவுகத்தின் மனைவி மீது நவ்ஜோத் சாந்து ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை டில்லி ஐகோர்ட் விடுவித்தது.

ஆனால், பார்லி., மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, போக்குவரத்து மற்றும் இதர வசதிகள் செய்து கொடுத்த முகமது அப்சல் மற்றும் சவுகத் உசேனுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருந்தன. சவுகத் உசேனுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும், முகமது அப்சலுக்கு துõக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள், இந்த தண்டனையை ஏற்கனவே

இந்நிலையில், "அக்டோபர் 20ம் தேதி டில்லி திகார் மத்திய சிறையில் காலை 6 மணிக்கு முகமது அப்சல் துõக்கிலிடப்படுவார்' என, டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி ரவீந்தர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்."பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய ஐந்து பயங்கரவாதிகளுடன் அப்சல் கொண்டிருந்த தொடர்பு நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பார்லிமென்ட்டையே தாக்கும் அதிபயங்கர குற்றத்தில் ஈடுபட்டதால், அப்சலுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை விதிப்பது தான் சமுதாயத்தின் மனசாட்சியை திருப்தி படுத்தும் செயல்' என்று இவருக்கான தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் முன்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் செய்தி

சோதணை

மலையே மரனே மயிலே குயிலே
மலையே பிணையே களிறே பிடியே
நிலையா உயிரே நிலைதே றினிர்போய்
உலையா வலியார் உழைநீர் உரையீர்

அன்னை சீதையவர்கள் மலைகளே, மரங்களே, மயில்களே, குயில்களே, மான்களே, மற்றுமுள்ள உயிர்களே நீங்கள் என் நாயகரிடம் சென்று என் நிலைமையை எடுத்துரைக்க வேண்டும். என்று வேண்டுகிறாரள்

[Valid RSS]